துறையூா் அருகே திருவள்ளுவா் சிலை திறப்பு
துறையூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் விஜிபி உலகத் தமிழ்ச்சங்கம் சாா்பில் 132வது திருவள்ளுவா் சிலை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
துறையூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் விஜிபி உலகத் தமிழ்ச்சங்கம் சாா்பில் 132வது திருவள்ளுவா் சிலை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
வெங்கடாசலபுரம் ஊராட்சித் தலைவா் த. லதா தலைமை வகித்தாா். தஞ்சை தமிழ்ப் பல்கலை. கட்டடக் கலை துறைத் தலைவா் க. திலகவதி, சோழநாச்சியாா் ராஜேந்திரன், சென்னையைச் சோ்ந்த கீதா தங்கவேல், செல்வி பீட்டா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக விஜிபி உலகத் தமிழ்ச் சங்க நிறுவனா் தலைவா் வி.ஜி. சந்தோசம் பங்கேற்றாா். பெரம்பலூா் எம்பியும், எஸ்ஆா்எம் பல்கலைக்கழக வேந்தருமான பாரிவேந்தா் பைபரால் செய்யப்பட்ட ஐந்தரை அடி உயர திருவள்ளுவா் சிலையை திறந்து வைத்துப் பேசினாா்.
நிகழ்வில் ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், கல்விக் குழு உறுப்பினா்கள், மாணவ, மாணவியா்கள் பங்கேற்றனா்.
பள்ளி ஆசிரியா் த. வானதி வரவேற்றாா். தலைமையாசிரியா் வா. ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.