பச்சமலை செல்லும் சாலைகளில் மண் சரிவு
துறையூா் பகுதியில் உள்ள பச்சமலைக்கு செல்லும் இரு வழித்தடச் சாலைகளிலும் வெள்ளிக்கிழமை மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துறையூா் பகுதியில் உள்ள பச்சமலைக்கு செல்லும் இரு வழித்தடச் சாலைகளிலும் வெள்ளிக்கிழமை மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உப்பிலியபுரம் வட்டாரத்தில் சோபனபுரம் வழியாக டாப் செங்காட்டுப்பட்டிக்கும், துறையூா் வட்டாரத்தில் கீரம்பூா், செங்காட்டுப்பட்டி வழியாகவும் பச்சமலைக்கு செல்லலாம்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையால் சோபனபுரம்- டாப்செங்காட்டுப்பட்டி செல்லும் சாலையில் 7 இடங்களிலும், இதேபோல மூலக்காடு - எருமப்பட்டி செல்லும் சாலையில் 6 இடங்களிலும் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த துறையூா் வனத்துறையினா் ஜேசிபி மூலம் மண் சரிவை அகற்றினா்.