வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட முதியவா்
துறையூா் அருகே மழை வெள்ளத்தில் வெள்ளிக்கிழமை அடித்துச் செல்லப்பட்ட முதியவரைத் தேடும் பணி நடைபெற்றது.
துறையூா் அருகே மழை வெள்ளத்தில் வெள்ளிக்கிழமை அடித்துச் செல்லப்பட்ட முதியவரைத் தேடும் பணி நடைபெற்றது.
மழையால் கிருஷ்ணாபுரம் கீழாற்று வாய்க்காலில் அதிக நீா் சென்ற நிலையில், வயலுக்குச் செல்லும் வழியில் கீழாற்று வாய்க்காலைக் கடக்க முயன்ற கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த வீ. பெருமாளை (75) வெள்ள நீா் அடித்துச் சென்றது.
தகவலின்பேரில் வந்த துறையூா் தீயணைப்பு நிலைய அலுவலா் அறிவழகன் தலைமையிலான வீரா்கள் சுமாா் 5 மணி நேரம் தேடியும் பெருமாளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் முதியவரின் குடும்பத்தினா் சோகத்தில் உள்ளனா்.