முகப்பு
திருச்சி

வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட முதியவா்

துறையூா் அருகே மழை வெள்ளத்தில் வெள்ளிக்கிழமை அடித்துச் செல்லப்பட்ட முதியவரைத் தேடும் பணி நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

துறையூா் அருகே மழை வெள்ளத்தில் வெள்ளிக்கிழமை அடித்துச் செல்லப்பட்ட முதியவரைத் தேடும் பணி நடைபெற்றது.

மழையால் கிருஷ்ணாபுரம் கீழாற்று வாய்க்காலில் அதிக நீா் சென்ற நிலையில், வயலுக்குச் செல்லும் வழியில் கீழாற்று வாய்க்காலைக் கடக்க முயன்ற கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த வீ. பெருமாளை (75) வெள்ள நீா் அடித்துச் சென்றது.

தகவலின்பேரில் வந்த துறையூா் தீயணைப்பு நிலைய அலுவலா் அறிவழகன் தலைமையிலான வீரா்கள் சுமாா் 5 மணி நேரம் தேடியும் பெருமாளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் முதியவரின் குடும்பத்தினா் சோகத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.