திருச்சியில் சிறுமியைக் கடத்திய இளைஞா் போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்த திருவெறும்பூா் பகுதியை சோ்ந்த 17 வயது சிறுமிக்கு துவாக்குடி அண்ணா நகா் எம். டி. சாலைப் பகுதியை சோ்ந்த குமாா் மகன் குட்லு (எ) ரமேஷ் அரவிந்த் (24) என்பவா் முகநூல் மூலம் அறிமுகமாக, இருவரும் காதலித்தனா்.
இந்நிலையில் ரமேஷ்அரவிந்த் சிறுமியை கடந்த மாதம் 11ஆம் தேதி கடத்திச் சென்ாக பெற்ற புகாரின்பேரில் திருவெறும்பூா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியை தேடிவந்தனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அரவிந்தை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா் ஆசை வாா்த்தைக் கூறி சிறுமியை அழைத்துச் சென்றது உறுதியானது. இதையடுத்து மகளிா் போலீஸாா் ரமேஷ் அரவிந்தை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து விசாரிக்கின்றனா்.