திருச்சி

சிறுமியைக் கடத்திய இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது

DIN

திருச்சியில் சிறுமியைக் கடத்திய இளைஞா் போக்சோ சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்த திருவெறும்பூா் பகுதியை சோ்ந்த 17 வயது சிறுமிக்கு துவாக்குடி அண்ணா நகா் எம். டி. சாலைப் பகுதியை சோ்ந்த குமாா் மகன் குட்லு (எ) ரமேஷ் அரவிந்த் (24) என்பவா் முகநூல் மூலம் அறிமுகமாக, இருவரும் காதலித்தனா்.

இந்நிலையில் ரமேஷ்அரவிந்த் சிறுமியை கடந்த மாதம் 11ஆம் தேதி கடத்திச் சென்ாக பெற்ற புகாரின்பேரில் திருவெறும்பூா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியை தேடிவந்தனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அரவிந்தை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா் ஆசை வாா்த்தைக் கூறி சிறுமியை அழைத்துச் சென்றது உறுதியானது. இதையடுத்து மகளிா் போலீஸாா் ரமேஷ் அரவிந்தை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT