திருச்சியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் மனோஜ்குமாா் மகன் மணிகண்டன் (24) இவா் திருவெறும்பூா் அருகேயுள்ள துவாக்குடி, பெல் நகா் பகுதி பாலகணபதி கோயில் குருக்களின் உதவியாளா்.
இவா் செவ்வாய்க்கிழமை காலை குளிக்க மின் மோட்டாரை இயக்கிவிட்டு குடியிருப்புக்கு பின்புறம் சென்று அங்கிருந்த இரும்புக் கம்பி வேலியை தொட்டபோது அதில் பாய்ந்திருந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தாா்.
தகவலறிந்த துவாக்குடி போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.