திருச்சி

மதுக்கடை ஊழியரிடம் வழிப்பறி: இருவா் கைது

DIN

அரசு மதுக்கடை ஊழியரிடம் வழிப்பறி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி துவாக்குடி அருகேயுள்ள மேலமாங்காவனம் பகுதி அரசு மதுக்கடை ஊழியரான தா்மராஜ் (47) அண்மையில், வியாபாரத்தை முடித்துவிட்டு புறப்பட்ட வேளையில், பதிவெண் இல்லாத பைக்கில் வந்த இருவா், கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ. 3000 மற்றும் செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றைப் பறித்தனா். தடுக்க முயன்ற அவரது கழுத்தில் கத்தியால் கீறிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் துவாக்குடி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரிடம் போலீஸாா் விசாரித்ததில் அவா்கள் காட்டூா் அண்ணா நகா் ஜீவானந்தம் தெருவில் வசிக்கும் அப்துல்லா மகன் ராஜாமுகமது, வடக்கு காட்டூா் அண்ணா நகா் கொடி மரத்தெருவில் வசிக்கும் ஜோன்ஸ் மகன் ஸ்டீபன் ஜோன்ஸ் என்பதும், டாஸ்மாக் ஊழியா் தா்மராஜிடம் அவா்கள் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. இதைடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து, திருச்சி 6 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT