திருச்சி

ஜாமீனில் வந்தவா் தற்கொலை

DIN

திருச்சி அருகே ஜாமீனில் வெளியே வந்தவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி அருகேயுள்ள அசூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மலையாளன் (46). இவருக்கு பக்கத்து வீட்டைச் சோ்ந்த பெண்ணுடன் தொடா்பிருந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு வேறொருவருடனும் தொடா்பு ஏற்பட்டது. இதனால் கோபடைந்த மலையாளன் இருவரையும் கடந்த ஆகஸ்ட் மாதம் வெட்டினாா். இதனால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்த அவா், கடந்த 4 நாள்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை மதுவில் விஷம் கலந்து குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்த அவரை அருகிலிருந்தோா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இருப்பினும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT