முகப்பு
திருச்சி

பெண்கள் பாதுகாப்புக்கு பணியிடங்களில் உள்ளகக் குழு ஆட்சியா் உத்தரவு

பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்துப் பணி இடங்களிலும் உள்ளகக் குழு அமைக்க வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்துப் பணி இடங்களிலும் உள்ளகக் குழு அமைக்க வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2013-இன் (தடுப்பு, தடை மற்றும் தீா்வு) கீழ், 10-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் (ஆண்,பெண்) அரசுத் துறை அலுவலகங்கள், நிறுவனங்கள், தனியாா் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள், சிறு குறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புசாரா பணியிடங்கள் முதலான இடங்களில் கீழ்காணும் விவரப்படி 4 பேரைக் கொண்ட உள்ளகக் குழு அமைத்து அதன் விவரத்தை ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்துக்கு ஒரு மாதத்துக்குள் அனுப்ப வேண்டும். இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பணிபுரியும் இடத்தில் மூத்த பெண் பணியாளரைத் தலைவராக இக்குழுவில் நியமிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் பிற துறைகள், பிற கிளைகள், பிற பணியிடங்களில் இருந்தும் நியமிக்கலாம். பெண்கள் சாா்ந்த பிரச்னைகளை முன்னெடுத்து அவற்றைக் களைய விருப்பமுடையவா் (அ) சமூகப் பணிகளில் அனுபவம் (அ) சட்ட அறிவு பெற்ற இரு பணியாளா்கள் நியமிக்கப்பட வேண்டும். பெண்களுக்கான சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனம், மகளிா் சங்கங்களைச் சாா்ந்த அல்லது பாலியல் வன்கொடுமைகள் குறித்த விழிப்புணா்வுடையோரில் ஒருவரை நியமிக்க வேண்டும். மேற்காணும் விவரப்படி உறுப்பினா் தேவைப்படின் மாவட்ட சமூகநல அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூகநல அலுவலகத்தை 0431-241379 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.