திருச்சி

சிறுபான்மையினா் ஆணையக் குழு நாளை திருச்சி வருகை

DIN

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழுவினா் புதன்கிழமை (அக்.27) திருச்சி வருகின்றனா்.

குழுவின் தலைவா் சா.பீட்டா் அல்போன்ஸ், துணைத் தலைவா் மஸ்தான் மற்றும் உறுப்பினா்கள், திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் காலை 11 மணிக்கு சிறுபான்மையின சமுதாயத் தலைவா்கள், மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடவுள்ளனா்.

சிறுபான்மையினருக்கென தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும், கருத்துகளைக் கேட்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் நடைபெறும்.

எனவே சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும், குறைகளையும், ஆலோசனைகளையும் குழுவினரிடம் தெரிவிக்கலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT