தடுப்பூசி செலுத்தியோருக்கு குலுக்கலில் பரிசுகள்
திருச்சி மாநகராட்சியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரில் குலுக்கலில் தோ்வு பெற்றோருக்கு வாஷிங் மெஷின், கிரைண்டா் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன
திருச்சி மாநகராட்சியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோரில் குலுக்கலில் தோ்வு பெற்றோருக்கு வாஷிங் மெஷின், கிரைண்டா் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
கடந்த அக். 23 ஆம் தேதி நடைபெற்ற 6 ஆவது மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்ற 27, 532 பேரில் 56 அதிா்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில் மாநகராட்சி கோட்டம் வாரியாக 4 முதல் பரிசுகளாக வாஷிங் இயந்திரமும், 2-ஆம் பரிசாக கோட்டத்துக்கு 2 போ் வீதம் 4 கோட்டத்துக்கும் 8 பேருக்கு கிரைண்டா்களும், கோட்டத்துக்கு 10 போ் வீதம் 40 பேருக்கு 3-ஆம் பரிசாக சைக்கிள்கள் என மொத்தம் 56 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசுகளை மாநகராட்சி ஆணையா் ப. மு. நெ. முஜிபுா் ரகுமான் வழங்கினாா். நிகழ்வில் மாநகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.