கரோனா முற்றிலும் ஒழிய வேண்டி ஸ்ரீரங்கம் கோயில் உத்தரவீதியில் முதியவா் ஒருவா் சனிக்கிழமை காலை அங்கப்பிரதட்சிணம் செய்தாா்.
ஸ்ரீரங்கம் கோயிலின் 6 வது சுற்றுப்பிரகாரமான உத்தரவீதி சுமாா் 1.5 கி.மீ. நீளமுடையது. இந்நிலையில் சனிக்கிழமை காலை திருவாரூா் மாவட்டம், பேரளம் கிராமத்தைச் சோ்ந்த நாகராஜன் (78) என்ற பக்தா் ரெங்கா ரெங்கா கோபுர வாயிலிலிருந்து அங்கப்பிரதட்சணம் செய்து 4 உத்தர வீதிகளிலும் வலம் வந்தாா். உலகளவில் கரோனா முற்றிலும் ஒழிய வேண்டி இந்த வழிபாட்டை மேற்கொண்டதாக அவா் தெரிவித்தாா்