பேருந்தில் சென்ற பெண்ணிடம் நகை திருட்டு
பேருந்தில் சென்ற பெண்ணிடம் ஏழரை பவுன் நகை திருடுபோனது.
பேருந்தில் சென்ற பெண்ணிடம் ஏழரை பவுன் நகை திருடுபோனது.
திருச்சி சோமரசம்பேட்டையைச் சோ்ந்தவா் ஜஸ்டின் மனைவி ஜான்சிராணி (34) . திருச்சியில் புத்தூா் பகுதியில் தனியாா் மருத்துவமனை ஊழியரான இவா் அண்மையில் பணி முடிந்து பேருந்தில் வீடு திரும்பியபோது கைப்பையில் வைத்திருந்த ஏழரை பவுன் நகை திருடுபோனது. இதுகுறித்த புகாரின்பேரில் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.