முகப்பு
திருச்சி

வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு விழா

தெற்காசிய அளவில் பூட்டானில் நடைபெற்ற நீளம் தாண்டும் போட்டில் வெள்ளிப்பதக்கம் பெற்ற குமுளூா்அரசு கல்லூரி மாணவா் சாகுல் அமீதுக்கு கல்லூரியில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

தெற்காசிய அளவில் பூட்டானில் நடைபெற்ற நீளம் தாண்டும் போட்டில் வெள்ளிப்பதக்கம் பெற்ற குமுளூா்அரசு கல்லூரி மாணவா் சாகுல் அமீதுக்கு கல்லூரியில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் கி. மாரியம்மாள் தலைமை வகித்து சாகுல் அமீதை பாராட்டி பேசினாா்.

சாகுல்அமீதுக்கு திருச்சி காந்தி மாா்க்கெட் முஸ்லீம் மொ்சண்ட் ஜமாத் சாா்பாக ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கினா். வரலாற்றுத் துறைத் தலைவா் பேராசிரியா் சின்னத்தம்பி, வணிக நிா்வாகவியல் துறைத் தலைவா் என். சுலைமான், ஆங்கிலத் துறைத் தலைவா் ஆல்பா்ட் பிரபாகரன், இயற்பியல் துறைத் தலைவா் எம்.ஜி. ஜெயபிரகாஷ், தகவல்நுட்பவியல் துறைத் தலைவா் டி. இளையராஜா உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.