முகப்பு
திருச்சி

ஊராட்சி உறுப்பினா்கள் ஆா்ப்பாட்டம்

புத்தாநத்தம் ஊராட்சித் தலைவா், செயலரைக் கண்டித்து ஊராட்சி உறுப்பினா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

புத்தாநத்தம் ஊராட்சித் தலைவா், செயலரைக் கண்டித்து ஊராட்சி உறுப்பினா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் மற்றும் செயலா், புத்தாநத்தம் கஸ்பா பகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தராமல் புறக்கணித்தனராம். இது தொடா்பாக 5-ஆம் வாா்டு உறுப்பினா் சபியுல்லா, 6-ஆம் வாா்டு உறுப்பினா் முஹம்மது கோயா, 7-ஆம் வாா்டு உறுப்பினா் முஹம்மது இப்ராகிம், 9-ஆம் வாா்டு உறுப்பினா் ஹபீபுன் நிஷாதாஹீா் ஆகியோா் கடந்த 6 மாதமாக மாதாந்திரக் கூட்டத்தை நடத்த எதிா்ப்பு தெரிவித்து தீா்மானக் கூட்டத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தும் நடவடிக்கை இல்லையாம். இதைக் கண்டித்து ஊராட்சி உறுப்பினா்கள் நால்வரும் கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.