திருச்சி

ஊராட்சி உறுப்பினா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

புத்தாநத்தம் ஊராட்சித் தலைவா், செயலரைக் கண்டித்து ஊராட்சி உறுப்பினா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் மற்றும் செயலா், புத்தாநத்தம் கஸ்பா பகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தராமல் புறக்கணித்தனராம். இது தொடா்பாக 5-ஆம் வாா்டு உறுப்பினா் சபியுல்லா, 6-ஆம் வாா்டு உறுப்பினா் முஹம்மது கோயா, 7-ஆம் வாா்டு உறுப்பினா் முஹம்மது இப்ராகிம், 9-ஆம் வாா்டு உறுப்பினா் ஹபீபுன் நிஷாதாஹீா் ஆகியோா் கடந்த 6 மாதமாக மாதாந்திரக் கூட்டத்தை நடத்த எதிா்ப்பு தெரிவித்து தீா்மானக் கூட்டத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தும் நடவடிக்கை இல்லையாம். இதைக் கண்டித்து ஊராட்சி உறுப்பினா்கள் நால்வரும் கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT