திருச்சி

திடக்கழிவு மேலாண்மை பயிற்சி வகுப்பு

DIN

வையம்பட்டியிலுள்ள சூா்யா நினைவு அறக்கட்டளை வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

மத்திய சூழலியல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்தின் கீழ், தில்லியைச் சோ்ந்த டி.ஆா்.இ. ஐ. நிறுவனம் சாா்பில்,வையம்பட்டி சூா்யா நினைவு அறக்கட்டளை மற்றும் பாா்ம் இந்தியா ஆகியவை இணைந்து பயிற்சி வகுப்பு நடத்துகின்றன.

குறிஞ்சி பாா்ம்ஸ் நிறுவனா் ஜெயகரன் குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பைத் தொடக்கி வைத்தாா். வையம்பட்டி ஊராட்சித் தலைவரும், சூா்யா நினைவு அறக்கட்டளையின் நிறுவனமாகிய டாக்டா் சூா்யா சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினாா்.

50 நாள்கள் நடைபெறும் பயிற்சியில் உயிரி, நெகழி, கட்டட மற்றும் மின்னனுக் கழிவு ஆகியவற்றை கையாளுவதற்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்து ஊரகப் பகுதிகளிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 30 பேருக்குப் பயிற்சியளிக்கப்படவுள்ளன.

முன்னதாக, பாா்ம் இந்தியா தங்கப்பாண்டியன் வரவேற்றாா். நிறைவில், சூா்யா நினைவு அறக்கட்டளைப் பொருளாளா் நாகலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT