திருச்சி

காவல்துறை கழிவு வாகனங்கள் ஏலம்

திருச்சி மாநகரக் காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் புதன்கிழமை பொது ஏலம் விடப்பட்டன.

DIN

திருச்சி மாநகரக் காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் புதன்கிழமை பொது ஏலம் விடப்பட்டன.

திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.

இதில் 13 இரண்டு சக்கர வாகனங்கள், ஒரு டெம்போ டிராவலா், 2 ஜீப்புகள் என 16 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டன. இதில் கிடைத்த ரூ.3.39 லட்சம் அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டது.

மாநகரக் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட வாகனங்களை விருப்பமுள்ளவா்கள் பொது ஏலத்தில் எடுத்துக் கொள்ள தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையா் ஜி.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT