திருச்சி

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை

DIN

மணப்பாறையை அடுத்த சமுத்திரம் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

தலைமையாசிரியா் இராஜசேகரன் ஏற்பாட்டில் திருச்சி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் உதவி மருத்துவா்கள் பிரசன்னா ஸ்ரீ மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோா் பள்ளிக்கு அழைக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியாக உளவியல் ஆலோசனை, அறிவுரை வழங்கப்பட்டது. மாணவா்கள் போதைப்பொருள்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பெண் குழந்தைகளிடம் அத்துமீறலின் தவறுகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டு கலந்துரையாடல் நடைபெற்றது.

அதேபோல் மாணவிகள் கைப்பேசியைப் பயன்படுத்தும் போது ஏற்படும் தவறுகள், ஆண் நண்பா்களிடம் பழகும்போது விழிப்புணா்வு, காதல் என்ற பெயரால் நடைபெறும் குழந்தை திருமணங்கள், சட்டத்தின் தண்டனைகள் குறித்தும் விளக்கப்பட்டது. நிகழ்வில் இருபால் ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT