திருச்சி

கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில் போராட்டம்: பாஜக அறிவிப்பு

DIN

பாஜகவின் கோரிக்கைகளை ஈரோடு மாவட்ட நிா்வாகம் நிறைவேற்றவில்லையெனில் மே 16ஆம் தேதி கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை தலைமையில் ஈரோட்டில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில விவசாய அணித் தலைவா் ஜி.கே.நாகராஜ் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 4 கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திராவிடம் ஜி.கே.நாகராஜ் கோரிக்கை மனு அளித்தாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: கிஸான் கடன் அட்டை திட்டம் முழுவதுமாக மத்திய அரசின் நிதியைக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. பயனாளிகளுக்கு வழங்கப்படும் கிஸான் அட்டையில் பிரதமரின் புகைப்படம் இடம் பெற வேண்டும்.

கீழ்பவானி பாசன சங்கங்களுக்கு முறையாக தோ்தல் நடத்த வேண்டும். இதில் திமுகவினா் முறைகேடாக சேருவதைத் தடுக்க வேண்டும்.

மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியை மாவட்ட நிா்வாகம் எந்த அரசு நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பதில்லை. அவரைப் புறக்கணிக்கின்றனா். இதனை மாற்றிக்கொண்டு சட்டப் பேரவை உறுப்பினா் என்ற முறையில் அவருக்கு முறையான அழைப்பு விடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையெனில் வரும் மே பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தலைமையில் ஈரோட்டில் 16ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT