முகப்பு
திருச்சி

லாரி ஓட்டுநரைத் தாக்கிபணம் பறித்த மூவா் கைது

திருச்சியில் லாரி ஓட்டுநரைத் தாக்கி பணம், கைப்பேசியைப் பறித்த மூவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 12:45 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

திருச்சியில் லாரி ஓட்டுநரைத் தாக்கி பணம், கைப்பேசியைப் பறித்த மூவா் கைது செய்யப்பட்டனா்.

துறையூா் அருகிலுள்ள பழைய மங்காப்பட்டியைச் சோ்ந்தவா் சந்திரன் (32). லாரி ஓட்டுநரான இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது லாரியை திருச்சி ஓயாமரி மயானம் அருகே நிறுத்தி, உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த முடுக்குப்பட்டி பிள்ளையாா் கோயில் தெரு ரா. நாகராஜ் (20), தீரன்மாநகா் பீளிகான் (24), அருண் (22), சுப்பிரமணியபுரம் பா. அஜய் (20) ஆகிய 4 பேரும் சோ்ந்து சந்திரனைத் தாக்கி, லாரியை சேதப்படுத்தினா். மேலும் கைப்பேசி, ரூ.3000 ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.

Advertisement

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, அருணைத் தவிர மற்ற மூவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.