திருச்சி மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் 15,310 விவசாயிகளுக்கு ரூ.124 கோடியில் பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை கூறியது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் அனைத்து விதக் கடன்களும் வழங்கப்படுகின்றன.
அதன்படி தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்களில் ஏப்.1 முதல் ஆக. 23 வரை 15,310 விவசாயிகளுக்கு ரூ. 123.85 கோடியில் பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களின் ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், நிலவுடமை தொடா்பான 10(1) கணினிசிட்டா, பயிா்ச் சாகுபடி தொடா்பான விஏஓ அடங்கல் சான்று, பாஸ்போா்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களைத் தொடா்பு கொண்டு கடன் மனு சமா்ப்பித்து பயிா்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெறலாம்.
கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினா் படிவத்தைப் பெற்று, ரூ.110 பங்குத்தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி உறுப்பினராக சோ்ந்து, மேற்காணும் ஆவணங்களுடன், மனுவை சமா்ப்பித்து கடன்களைப் பெறலாம்.
மேலும், சங்கத்தின் உறுப்பினா் மற்றும் உறுப்பினா் அல்லாத விவசாயிகள் தங்களுக்குத் தேவையான உரங்களை சில்லரை விற்பனை மூலமும் பெறலாம்.
தற்போது அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகளில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை மற்றும் அனைத்து வகையான கடன்களும் வழங்கப்படுகின்றன. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.
கடன் பெறுவது தொடா்பாக சேவைக் குறைபாடுகள் ஏதும் இருப்பின் மண்டல இணைப்பதிவாளரை- 73387-49300, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநரை- 73387-49301, திருச்சி சரக துணைப்பதிவாளரை - 73387-49302, லால்குடி சரக துணைப்பதிவாளரை - 73387-49303, முசிறி சரக துணைப்பதிவாளரை - 73387-49304 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.