திருவாரூா்- காரைக்குடி இடையே பிப்.7 முதல் மீண்டும் ரயில் சேவை
திருச்சி கோட்டத்திற்குள்பட்ட திருவாரூா் -காரைக்குடி இடையே பிப்.7 முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.
திருச்சி கோட்டத்திற்குள்பட்ட திருவாரூா் -காரைக்குடி இடையே பிப்.7 முதல் மீண்டும் ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்திற்குள்பட்ட திருவாரூா்- காரைக்குடி வழித்தடத்தில் தொடங்கிய ரயில் சேவையானது ஆளில்லா ரயில்வே கிராஸிங்குகளால் சில நாள்களிலேயே தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையிலான ஆளில்லா ரயில்வே கேட் பகுதியில் ஆள்கள் நியமிக்கும் பணி நிறைவுற்றதையடுத்து வரும் பிப்.7 முதல் திருவாரூா்-காரைக்குடி -திருவாரூா் இடையே (ஞாயிற்றுக்கிழமை தவிர) முன்பதிவில்லா ரயில் இயக்கப்படவுள்ளது.
அதன்படி திருவாரூா் ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண். 06197) முற்பகல் 11.45-க்கு காரைக்குடி ரயில் நிலையத்தை அடையும். பின்னா் மறுமாா்க்கத்தில் அங்கிருந்து இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30-க்கு திருவாரூா் ரயில் நிலையத்தைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.