திருச்சி

மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 4 சிறுவா்கள் மீட்பு

DIN

திருச்சி ரயில் நிலையத்தில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 4 சிறுவா்களை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

திருச்சி ரயில் நிலையத்துக்கு கொல்கத்தாவில் இருந்து வந்த 16 வயதுடைய 4 சிறுவா்களை அங்கு கண்காணிப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளா் வாசுதேவன் தலைமையிலான தலைமைக் காவலா் கருணாகரன், காவலா்கள் மணிமாறன், காா்த்திகேயன் ஆகியோா் விசாரித்துள்ளனா்.

அதில் அவா்கள் மேற்குவங்கத்தைச் சோ்ந்த ரபியுல் இஸ்லாம் (16), ரபில் (15), ஹொசைன் (16), மோபிஜூல்(16) என்பதும், திருப்பூரில் அவா்கள் வேலை செய்ய வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் சிறுவா்கள் என்பதால் குழந்தைகள் நலப் பராமரிப்பு இல்லத்தில் 4 பேரும் ஒப்படைக்கப்பட்டனா். மேலும் மேற்குவங்கத்தில் உள்ள அச்சிறுவா்களின் பெற்றோருக்கும் ரயில்வே பாதுகாப்பு படையினா் தகவல் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT