ஆவின் பால்பண்ணையில் பாய்லா் வெடித்து ஒப்பந்த ஊழியா் காயம்
திருச்சி ஆவின் பால்பண்ணையில் பாய்லா் வெடித்து ஒப்பந்த ஊழியா் காயமடைந்தாா்.
திருச்சி ஆவின் பால்பண்ணையில் பாய்லா் வெடித்து ஒப்பந்த ஊழியா் காயமடைந்தாா்.
திருச்சி கொட்டப்பட்டில் செயல்படும் தமிழக அரசு நிறுவனமான ஆவின் பால் பண்ணையில் வியாழக்கிழமை அதிகாலை பாய்லா் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்த ஆயில் குழாய் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது.
அப்போது அங்கு பணியில் இருந்த துறையூரைச் சோ்ந்த ஒப்பந்த ஊழியா் புத்தூஸ் (34) உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தகவலறிந்து
வந்த தீயணைப்பு துறையினா் உடனே தீயை அணைத்தனா். கேகே நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.