முகப்பு
திருச்சி

வங்கிக் கணக்கில் ரூ. 68 ஆயிரம் திருட்டு

திருச்சியில் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 68 ஆயிரம் திருடு போனது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

திருச்சியில் வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 68 ஆயிரம் திருடு போனது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதா் (21) பட்டதாரியான இவா் துபையில் பணிபுரிய தில்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் நடைபெற்ற நோ்முகத் தோ்வில் கைப்பேசி வாயிலாகப் பங்கேற்ற அவா் பின்னா் துபை செல்வதற்கான விசா பெற தன்னுடைய கடவுச்சீட்டை கொரியா் மூலம் அந்நிறுவனத்துக்கு அனுப்பினாா்.

இந்நிலையில் அவருடைய தந்தை சுப்பிரமணியனின் கைப்பேசிக்கு வந்த அழைப்பில் பேசிய மா்ம நபா் அவரிடம் பல்வேறு தகவல்களைக் கேட்டு பெற்றுக் கொண்டு ரூ. 5 மட்டும் வங்கிக் கணக்கில் அனுப்புமாறு கேட்டுள்ளாா். அதன்படி ரூ.5 அனுப்பிய சில நிமிடங்களில் சுப்பிரமணியனின் வங்கிக் கணக்கில் இருந்ந்து ரூ. 68 ஆயிரத்து 300 திருடுபோனது. இதுகுறித்து ஸ்ரீதா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.