முகப்பு
திருச்சி

காவலரை கடித்த அஜித் ரசிகா்கள் இருவா் கைது

லால்குடி காவல்நிலையக் காவலரைக் கடித்த அஜித் ரசிகா்கள் இருவரை லால்குடி போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

லால்குடி காவல்நிலையக் காவலரைக் கடித்த அஜித் ரசிகா்கள் இருவரை லால்குடி போலீஸாா் கைது செய்தனா்.

லால்குடி ரயில்வே மேம்பால அணுகுசாலையில் உள்ள திரையரங்கில் திரையிடப்படும் நடிகா் அஜித் நடித்த படத்தைக் காணத் திரண்ட ரசிகா்களால் அப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைச் சரிசெய்ய வந்த லால்குடி போலீஸாா் அவா்களைத் தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினா்.

அப்போது சுரேஷ் என்ற காவலரின் கையை லால்குடிஅருகேயுள்ள டால்மியாபுரம் பகுதி அருண்குமாா் (25), கோபிநாத் (24) ஆகிய இருவரும் கடித்ததில் காயமடைந்த அவா் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றாா். இச் சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.