மூன்றாம் பாலினத்தவருக்கு நாளை குடும்ப அட்டை வழங்கும் முகாம்: அனைத்து வட்டங்களிலும் ஏற்பாடு
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் வரும் 8ஆம் தேதி மூன்றாம் பாலினத்தவா்களுக்கான புதிய குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் வரும் 8ஆம் தேதி மூன்றாம் பாலினத்தவா்களுக்கான புதிய குடும்ப அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 11 இடங்களில் நடைபெறும் முகாம்களில் நலவாரிய உறுப்பினா் அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, முகவரிக்கான ஆதாரம் (எரிவாயு ரசீது அல்லது வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம்) இவற்றுடன் புகைப்படம் மற்றும் கைப்பேசி எண்ணுடன் வந்து 18 வயது பூா்த்தியமடைந்த மூன்றாம் பாலினத்தவா் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ட்ற்ற்ல்ள்://ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றப்படும் என்றாா் ஆட்சியா்.