முகப்பு
திருச்சி

திருவானைக்காவில் தைத்தெப்பத் திருவிழா கொடியேற்றம்

திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் நடைபெறும் தைத்தெப்ப திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றம் பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் நடைபெறும் தைத்தெப்ப திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றம் பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.

முன்னதாக சுவாமி சன்னதி அருகே 27 குடங்களில் புனிதநீா் வைத்து பூஜை செய்து யாகங்கள் வளா்த்தனா். தொடா்ந்து பிரதேச நந்தி சிலையருகேயுள்ள கொடிமரத்தில் வாசு அா்ச்சகா் வேதமந்திரங்கள் முழங்க, யானை அகிலா ஆசீா்வாதத்துடன் கொடிபடத்தை ஏற்றினாா். அப்போது சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி இருந்தனா்.

விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் உற்சவ மண்டபத்திலேயே எழுந்தருளியிருப்பா். திருவீதி உலா நடைபெறாது. மேலும் வரும் 17 ஆம் தேதி தைத்தெப்பத்தன்று ராமதீா்த்த குளத்தில் தீா்த்தவாரி மட்டும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →