மாவட்டத்தில் இதுவரை 46 % சிறாருக்கு தடுப்பூசி
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 46 சதத்துக்கும் மேற்பட்ட சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 46 சதத்துக்கும் மேற்பட்ட சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 15 முதல் 18 வயது வரையிலான கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வேண்டிய சிறாா்களின் இலக்கு 1,26,401 ஆக உள்ளது.
இவா்களில் புதன்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்ட 18, 761 பேரையும் சோ்த்து இதுவரை 57,983 சிறாா்களுக்கு (45.9 சதம்) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
எனவே, பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் முகாம்களில் சிறாா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு தங்களைக் காத்துக் கொள்ள மாவட்ட நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.