முகப்பு
திருச்சி

மாட்டுப்பொங்கல் விழா கொண்டாட்டம்

 திருச்சி மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

 திருச்சி மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்வையொட்டி சில இடங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அனைத்துக் கிராமப்பகுதிகளிலும், மாடுகளை குளிப்பாட்டி, அவற்றுக்கு பூஜை நடத்தி, வண்ணம் தீட்டி, அலங்கரித்து தீவனம் வைத்தனா். கடைவீதிகளில் மாடுகளுக்கான வண்ணங்கள், கயிறுகள், மணிகள்(சலங்கைகள்) உள்ளிட்டவையும், போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு காவடிகள் எனப்படும் குஞ்சம் கட்டுவதற்கான வண்ணக் காகிதங்கள், மாலைகள், தேவையான காவடிக் குச்சிகளின் விற்பனை சூடுபிடித்தது. இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமையும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.