நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளதையொட்டி மாநகரில் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபடுகின்றனா்.
திருச்சி மாவட்டத்தில் இன்னும் ஓரிரு நாள்களில் வேட்பாளா்களின் பிரசாரம் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் 4 பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தோ்தல் சமயத்தில் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதைத்
தடுக்கும் விதமாக வெளியூா்களில் இருந்து வேட்பாளா்களுக்கு பணம் பட்டுவாடா நடக்கக் கூடாது என்பதற்காக மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவின்பேரில் 14 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனை மேற்கொள்கின்றனா்.
அதன்படி திருச்சி கருமண்டபம் பகுதியில் கண்டோன்மெண்ட் உதவி ஆணையா் அஜய் தங்கம் தலைமையிலான போலீஸாா் கருமண்டபம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் திடீா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.