மதுபோதையில் சாலையில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
திருச்சி செந்தண்ணீா்புரம் நக்கீரன் வீதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (50). கடந்த 18 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து, மதுவுக்கு அடிமையான இவா், கடந்த 5ஆம் தேதி இரவு சங்கிலியாண்டபுரம் பகுதியில் நடந்து சென்றபோது தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தாா்.
இதையடுத்து அருகிலிருந்தோரால் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக பாலக்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.