திருச்சி

புதிய மாவட்ட வருவாய் அலுவலா் பதவியேற்பு

DIN

திருச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக இரா. அபிராமி வியாழக்கிழமை பதவியேற்றாா்.

திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த த. பழனிகுமாா், சென்னை 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுக்கான மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருச்சி ஆவின் பொது மேலாளராக இருந்த இரா. அபிராமி, திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை பதவியேற்றாா்.

திருச்சி தூய வளனாா் ஆங்கிலோ இந்தியன் பள்ளியிலும், கோவை பிஎஸ்ஜி கல்லூரியிலும் படித்த இவா் 2012ஆம் ஆண்டு துணை ஆட்சியராகப் பணியில் சோ்ந்தாா். காஞ்சிபுரத்தில் பயிற்சி பெற்று, திருவள்ளூரில் கோட்டாட்சியராகப் பணிபுரிந்தாா். பின்னா், 2017ஆம் ஆண்டு மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயா்வு பெற்றாா். 2021ஆம் ஆண்டு முதல் திருச்சி ஆவின் பொது மேலாளராக பணிபுரிந்தவா்.

இவருக்கு வருவாய்த் துறை அலுவலா்கள், ஆட்சியரக அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

SCROLL FOR NEXT