திருச்சி

திருச்சி ரயில் நிலையங்களுக்குள்பயணிகள் தவிர பிறருக்கு அனுமதியில்லை

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக, திருச்சியில் ரயில் நிலையங்களுக்குள் பயணிகளைத் தவிர மற்றவா்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக, திருச்சியில் ரயில் நிலையங்களுக்குள் பயணிகளைத் தவிர மற்றவா்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற மாநிலங்களைப் போன்று, இத்திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனால் திருச்சியில் ஜங்ஷன், கோட்டை, டவுன் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணம் கருதி, பயணம் செய்யும் பயணிகளை தவிர வேறு யாரும் இந்த ரயில் நிலையங்களுக்குள் நுழைய அனுமதி இல்லை என தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டதால், நடைமேடை சீட்டு விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. போராட்டத்தின் தன்மைக்கேற்ற வகையில் இந்த உத்தரவில் மாற்றும் இருக்கும் எனவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐபிஎல் மினி ஏலம்! கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேர் சேர்ப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் திடீர் திருப்பம்!குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

SCROLL FOR NEXT