திருச்சி

மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் சோ்க்கை தொடக்கம்

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலை அறிவியல் கல்லூரி தற்காலிக இடத்தில் துவக்கப்பட்டு புதன்கிழமை முதல் இணையவழி மாணவா் சோ்க்கை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

எம்எல்ஏ ப. அப்துல்சமது, அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரின் தொடா் முயற்சிக்கு பின், கடந்த சட்டப்பேரவை தொடரில் மணப்பாறையில் அரசு கலை அறிவியல் அமைக்க அரசின் ஒப்புதல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து பண்ணாங்கொம்பு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாகச் செயல்படத் தொடங்கியுள்ள மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பம் இணையவழியாக பெறப்படுகிறது.

இளநிலை இயற்பியல் (ஆங்கில வழி), இளநிலை கணினி அறிவியல் (ஆங்கில வழி), இளநிலை வணிகவியல் (ஆங்கில வழி), இளநிலை ஆங்கிலம் மற்றும் இளநிலை தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு ஆகிய இணையத்தளத்தில் கல்லூரிக் குறியீடு - 1061017 என்பதில் ஜூன் 22 முதல் ஜூலை 7 வரை இருபால் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் கே.அங்கம்மாள் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT