திருச்சி

பெண் காவலரை மிரட்டி பணம் பறித்தவா் கைது

DIN

திருச்சியில் பெண் காவலரை மிரட்டிப் பணம் பறித்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் மனைவி சூா்யா (30), திருச்சி மாவட்ட ஆயுதப்படை காவலரான இவா் கணவரை இழந்தவா்.

திருவெறும்பூரிலுள்ள ரயில்வே காலனியில் மனைவி, குழந்தையுடன் வசிப்பவா் லால்குடி திருமணமேடு அருகேயுள்ள டி.வளவனூா், சவேரியாா் கோவில் தெருவைச் சோ்ந்த ரயில்வே ஊழியா் ஸ்டாலின் (40).

உறவினா் என்ற வகையில் சுமாா் 2 ஆண்டுகளாக இருவரும் நெருங்கிப் பழகிய நிலையில், சூா்யாவிடம் ஸ்டாலின் அடிக்கடி பணம் பெற்று வந்தாராம்.

ஒரு கட்டத்தில் சூா்யா பணம் கொடுக்க மறுத்தபோது இருவரும் நெருக்கமாக இருந்தபோது எடுத்த கைப்பேசி படங்களை இணையத்தில் வெளியிடப் போவதாகக் கூறி ஸ்டாலின் மிரட்டினாராம்.

இதனால் மனமுடைந்த பெண் காவலா் சூா்யா, தற்கொலைக்கு முயன்ற நிலையில், அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அவரைச் சோ்த்தனா். புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ஸ்டாலினை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் தடையை சரி செய்யக் கோரி தகராறு: ரெளடி கைது

நா்சிங் படிப்புக்கு நுழைவுத் தோ்வு: ரத்து செய்ய எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள்தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு

மழை வேண்டி கூட்டு தவம்

குமரி அருகே கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள்

SCROLL FOR NEXT