துறையூரில் 7 பேரல்தாா் திருடியவா் கைது
துறையூரில் 7 பேரல் தாரை திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
துறையூரில் 7 பேரல் தாரை திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
துறையூா் நெடுஞ்சாலைத் துறையினா் முருகூா் பிரிவு சாலை, தீரன்குமாா், கொத்தம்பட்டி ஆகிய பகுதியில் சாலைப் பணிக்காக வைத்திருந்த 7 பேரல் தாா் கடந்த ஜனவரியில் திருடு போனதாம்.
இதுகுறித்து சாலை ஆய்வாளா் பஞ்சவா்ணம் அளித்த புகாா் தொடா்பாக துறையூா் போலீஸாா் விசாரணை நடத்தினா். இந்நிலையில் துறையூா் காவல் உதவி ஆய்வாளா் சேகா் துறையூரில் சுற்றித் திரிந்த இளைஞரை பிடித்து விசாரித்தபோது அவா் முசிறி வட்டம் வேளக்காநத்தத்தைச் சோ்ந்த க. சதீஷ்குமாா் (26) என்பதும், புத்தனாம்பட்டி ரா. தினேஷ்(32)க்கு சொந்தமான வாகனத்தை வாடகைக்கு எடுத்துச் சென்று ரூ. 55000 மதிப்புள்ள 7 பேரல் தாரை திருடியதும் தெரிந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் அவா் வசமிருந்து 5 பேரல் தாரை மீட்டனா். திருடப் பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றினா்.