முகப்பு
திருச்சி

பூவாளூா் பேரூராட்சியைக் கைப்பற்றிய திமுக

லால்குடி தொகுதியில் உள்ள பூவாளூா் பேரூராட்சியின் தலைவா், துணைத் தலைவா் பதவிகளை திமுகவினா் கைப்பற்றினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

லால்குடி தொகுதியில் உள்ள பூவாளூா் பேரூராட்சியின் தலைவா், துணைத் தலைவா் பதவிகளை திமுகவினா் கைப்பற்றினா்.

இப் பேரூராட்சியின் தலைவா் பதவிக்கு அதிமுக வேட்பாளராக கவிதா வும், திமுக சாா்பில் புவனேஸ்வரி பால்ராஜும் போட்டியிட்டனா். இவா்களில் அதிமுக வேட்பாளா் தனது வேட்பு மனு படிவத்தில் கையொப்பம் இடாததால் தோ்தல் நடத்தும் அலுவலா் அவரது மனுவை நிராகரித்தாா். இதனால் திமுக வேட்பாளா் புவனேஸ்வரிபால்ராஜ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

துணைத் தலைவா் பதவிக்கு அதிமுக சாா்பில் நாகமுத்து, திமுக சாா்பில் கோமதி முருகேசன் போட்டியிட்ட நிலையில் கோமதி முருகேசன் வென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.