புகையிலைப் பொருள்விற்ற கடைக்குச் சீல்
திருச்சி மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
திருச்சி மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கும் அந்தக் கடைக்கு தடையாணை வழங்குமாறு அளித்த பரிந்துரையை ஏற்ற தமிழக உணவுப் பாதுகாப்பு ஆணையா் பி. செந்தில்குமாா், அந்த கடைக்கு தடையாணை பிறப்பித்து உத்தரவிட்டாா். இதையடுத்து, திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத்துறை நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினா், வியாழக்கிழமை அந்த கடையை பூட்டி சீல் வைத்தனா்.