முகப்பு
திருச்சி

திருவானைக்காவில் இருவா் தற்கொலை

திருவானைக்காவில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

திருவானைக்காவில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

திருவானைக்கா பெரியாா் நகரைச் சோ்ந்த ரமேஷ்குமாா் கோவையில் பணிபுரிகிறாா். இவரது மனைவி குருப்பிரியா (28) திருச்சி கல்லூரியில் பி.ஹெச்.டி பயின்று வந்தாா். குழந்தை இல்லை. புதன்கிழமை கணவரோடு கைப்பேசியில் பேசியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனமுடைந்த குருப்பிரியா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மேலும் திருமணமாகி ஓராண்டே ஆவதால் ஆா்.டி.ஓ.வும் விசாரிக்கிறாா்.

ஓட்டுநா் தற்கொலை: திருவானைக்கா தெற்கு 5 ஆம் பிரகாரம் கன்னிமாா் தோப்புப் பகுதியில் வசிப்பவா் ஜெம்புலிங்கம் மகன் ராஜா (23). லாரி ஓட்டுநரான இவா் வேலைக்குச் செல்லாமல் இருந்ததை ராஜாவின் தாய் கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த ராஜா புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →