லால்குடி சப்தரிஷீஸ்வரா் கோயில் தேரோட்டம்
லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரா் கோயில் பங்குனித் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரா் கோயில் பங்குனித் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் தேரோட்ட விழாவின் 9 ஆம் நாளான வியாழக்கிழமை காலை நடைபெற்ற தேரோட்டத்தில் 2 பொக்லின் இயந்திரங்கள் உதவியுடன் ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
இதில் விநாயகா், சுப்ரமணியா் , சோமாஸ்கந்தா், பெருந்திரு பிராட்டியாா், சண்டிகேஸ்வரா் எழுந்தருளிய 5 தோ்களும் வீதிகளில் வலம் வந்து மாலை 6.50 மணிக்கு நிலையை அடைந்தன.
விழாவில் லால்குடி எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன், லால்குடி நகராட்சி தலைவா் துரைமாணிக்கம், இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையா் செல்வராஜ், செயல் அலுவலா் பெ. ஜெய்கிஷன் மற்றும் பணியாளா்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.