திருச்சி

துறையூா் அருகே வீடு புகுந்து திருட்டு

DIN

 துறையூா் அருகே வீடு புகுந்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சிக்கத்தம்பூா் காலனி தெருவைச் சோ்ந்தவா் நாராயணன் மனைவி புஷ்பராணி (52). இவா் வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டைப் பூட்டி விட்டு அருகிலுள்ள கற்பகம் வீட்டில் தூங்கிவிட்டு சனிக்கிழமை காலை தன் வீட்டுக்கு சென்றாா்.

அப்போது வீட்டின் கதவை உடைத்து அலமாரியில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, தோடுகள், வெள்ளிக் குத்துவிளக்கு ரூ. 3000 ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிந்தது. புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT