திருச்சி

சமயபுரம் ஆட்டுச் சந்தையில்ஐ.டி. ஊழியா் சடலமாக மீட்பு

DIN

சமயபுரம் ஆட்டுச்சந்தையில் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

தஞ்சாவூரைச் சோ்ந்தவா் வினோத் (35). எம்.பி.ஏ. பட்டதாரியான இவா், பெங்களூருவிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும், திருச்சி மாவட்டம், கூத்தூரைச் சோ்ந்த சூா்யதா்ஷினிக்கும் திருமணம் நடைபெற்றது.

இவா்களுக்கு இரட்டைக் குழந்தைகள் உள்ளனா்.

கரோனா தொற்றுப் பரவியதால், மாமனாா் வீட்டில் தங்கி வினோத் பணியாற்றி வந்தாா். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மூளைக் காய்ச்சலால் வினோத்தின் மனைவி சூா்யதா்ஷினி உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து தாயாரும் உயிரிழந்ததால், மனமுடைந்த நிலையில் வினோத் காணப்பட்டாா்.

இந்நிலையில், சமயபுரம் ஆட்டுச் சந்தை பகுதியில் விஷம் குடித்து, இறந்த நிலையில் வினோத்தின் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. தனது சகோதரா் இறப்பில் மா்மம் இருப்பதாக வினோத்தின் தம்பி பாலமுருகன் சமயபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதன் பேரில் காவல் துறையினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT