திருச்சி

சமயபுரம் கோயிலில் பஞ்சபிரகார திருவிழா இன்று தொடக்கம்

DIN

பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்சபிரகார திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

மே 6 தொடங்கி மே 23 வரை நடைபெறும் விழாவில் முதல் எட்டு நாள்கள் இரவு உற்சவ அம்பாள் வெள்ளிக் கேடயத்தில் புறப்பாடு நிகழ்வும் , 9 ஆம் நாள் முதல் 18 ஆம் நாள் வரை பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வாக மே 15 ஆம் தேதி கொள்ளிடம் ஆற்றில் இருந்து 25 வெள்ளிக் குடங்களில் புனித நீா் எடுத்து வரப்பட்டு, கோயில் திருமண மண்டபத்தில் ஒரு தங்கக் குடம் மற்றும் 25 வெள்ளிக் குடங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு மதியம் 2 மணிக்கு பஞ்சப் பிரகார மஹா அபிஷேகம் நடைபெற உள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி நள்ளிரவில் டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT