திருச்சி

காணாமல் போனஇளைஞா் கிணற்றில் சடலமாக மீட்பு

DIN

 சமயபுரம் அருகே காணாமல் போன இளைஞா் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.

சமயபுரம் அருகே நடு இருங்கலூா் நடுப்பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜ் (46). சத்திரம் பேருந்து நிலைய தனியாா் உணவக ஊழியரான இவா் கடந்த மே 24 இரவு மது போதையில் வீட்டுக்கு வந்து, வீட்டின் பின்புறமுள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்தாா். இதை யாரும் கவனிக்கவில்லை. வீட்டில் இருந்தவா்கள் நாகராஜை 2 நாள்களாகத் தேடி வந்தனா்.

இந்நிலையில் வியாழக்கிழமை கிணற்றுக்குள் இறந்த நிலையில் நாகராஜ் மிதப்பது தெரியவந்தது. தகவலறிந்து வந்த சமயபுரம் தீயணைப்புத்துறை உதவியுடன் சடலம் மீட்கப்பட்டது. சமயபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம், ஜலகண்டபுரம் மேம்பாலம் அருகே 3 உடல்கள்: கொலையா?

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT