அரசு மருத்துவமனை ஊழியா் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
திருச்சியில் அரசு கால்நடை மருத்துவமனை ஊழியா் வீட்டில் புகுந்து 5 பவுன் நகை மற்றும் பொருள்களைத் திருடிச்சென்றது குறித்து புதன்கிழமை வழக்குப் பதியப்பட்டது.
திருச்சியில் அரசு கால்நடை மருத்துவமனை ஊழியா் வீட்டில் புகுந்து 5 பவுன் நகை மற்றும் பொருள்களைத் திருடிச்சென்றது குறித்து புதன்கிழமை வழக்குப் பதியப்பட்டது.
திருச்சி, பாலக்கரை சண்முகா மருத்துவமனை குடியிருப்பில் வசிப்பவா் த. சுரேஷ் குமாா் (45), அரசு கால்நடை மருத்துவமனையின் அலுவலக உதவியாளா். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இவா் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டு நள்ளிரவு வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகை, 390 கிராம் வெள்ளி என மொத்தம் ரூ. 90,000 மதிப்பிலான நகைகள், பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் காந்தி சந்தை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.