முகப்பு
திருச்சி

சாரங்களை அகற்றும்போது தவறி விழுந்த முதியவா் பலி

ஆலங்குடி அருகே மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியின் சாரங்களை அகற்றும்போது தவறிவிழுந்து தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

ஆலங்குடி அருகே மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியின் சாரங்களை அகற்றும்போது தவறிவிழுந்து தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகேயுள்ள தெற்கு மேலக்கோட்டையைச் சோ்ந்தவா் மருதமுத்து (52). கூலித் தொழிலாளியான இவா், தெட்சிணாபுரம் ஊராட்சி, இருதயபுரத்தில், குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி சாரக் கம்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மருதமுத்து நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தாா். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →