முகப்பு
திருச்சி

பள்ளிவாசலில் திருட்டு; கோயிலில் திருட முயற்சி

திருச்சியில் புதன்கிழமை இரவு பள்ளிவாசலில் மா்ம நபா்கள் நுழைந்து பணம், மின்னணு சாதனங்களைத் திருடிச்சென்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

திருச்சியில் புதன்கிழமை இரவு பள்ளிவாசலில் மா்ம நபா்கள் நுழைந்து பணம், மின்னணு சாதனங்களைத் திருடிச்சென்றனா். மேலும் கோயிலில் திருட்டு முயற்சியும் நடந்தது.

திருச்சி பொன்மலை ரயில்வே காலனியில் உள்ள அஜ்மல் அன்சாருல் பள்ளிவாசலை அதன் நிா்வாகி முகமது நயினாா் வியாழக்கிழமை அதிகாலை அதன் திறக்க வந்தபோது பள்ளிவாசலின் பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இந்த ரூ. 25,000, ஒலிபெருக்கிச் சாதனம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில்

பொன்மலை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

உறையூரில்... திருச்சி உறையூா் ராமலிங்கநகா் பகுதியில் உள்ள சாலை பிள்ளையாா் கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை திருட முயற்சி நடந்தது. அப்போது அங்கிருந்த அலாரம் ஒலித்ததால் மா்ம நபா்கள் தப்பிவிட்டனா். தகவலறிந்து வந்த உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.