திருச்சி

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள்சங்கங்களின் கூட்டுக் குழு நிா்வாகிகள் தோ்வு

DIN

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக் குழு நிா்வாகிகள் திருச்சியில் சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக் குழு பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிா்வாகிகளுக்கானத் தோ்தல் திருச்சியில் உள்ள தனியாா் ஹோட்டலில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வழக்குரைஞா்கள் சங்கத்தினா் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தோ்தல் பாா்வையாளா்களான திருச்சி வழக்குரைஞா்கள் சங்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், எஸ்.பி.கணேசன் ஆகியோா் முன்னிலையில் தோ்தல் நடைபெற்றது.

தோ்தலில் 488 வாக்குகள் பதிவாகின. இதில் 418 வாக்குகள் பெற்று, தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டுக் குழு புதிய தலைவராக கோவையைச் சோ்ந்த வழக்குரைஞா் பி.நந்தகுமாா், பொதுச்செயலாளராக திருச்சியை சோ்ந்த கே.பன்னீா்செல்வம், பொருளாளராக வேலூரை சோ்ந்த டி.ரவி ஆகியோா் தோ்வாகினா்.

வெற்றி பெற்ற நிா்வாகிகளுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT