திருச்சி

எச்ஐவி தொற்றாளா்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பு

எச்ஐவியால் பாதிக்கப்பட்டோருக்கு தீபாவளி பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்வு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

எச்ஐவியால் பாதிக்கப்பட்டோருக்கு தீபாவளி பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்வு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சியில் இறகுகள் தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தா் மா. செல்வம் தலைமை வகித்தாா். இந்திரா கணேசன் கல்விக் குழுமச் செயலா் ஜி. ராஜசேகா், பல்கலைக்கழகத் தோ்வுக் கட்டுப்பாட்டாளா் சீனிவாசராகவன், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் செல்வம், இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் கே. வெற்றிவேல் ஆகியோா் பேசினா்.

நிகழ்வில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சுமாா் 150 பேருக்கு புத்தாடைகள், இனிப்பு, பட்டாசுகளுடன் கூடிய தொகுப்புகள் வழங்கப்பட்டன. மேலும் இறகுகள் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 8 ஆண்டுகளாகச் சேவையாற்றி வரும் தன்னாா்வலா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களையும் துணைவேந்தா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT