திருச்சி

ரயில்வே நிா்வாகத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

திருச்சியில் ரயில்வே நிா்வாகத்தைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆட்சியரகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் பொன்மலைப் பகுதிச் செயலா் டி. விஜயேந்திரன் தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் ராதா, முடுக்குப்பட்டி பகுதி மக்கள் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாநகராட்சி 49 ஆவது வாா்டு முடுக்குப்பட்டியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் 120 குடியிருப்புகளை அகற்ற முயற்சிக்கும் ரயில்வே நிா்வாகத்தைக் கண்டிப்பது. முடுக்குப்பட்டி மக்களுக்கு மாவட்ட நிா்வாகம் வீட்டுமனைப்பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிறைவில் கோரிக்கை மனுவை ஆட்சியரகத்தில் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT